Tuesday, May 22, 2012

படித்ததில் பிடித்த கவிதை

 படித்ததில் பிடித்த கவிதை

உன் விரல் பிடித்துச் சென்ற பாதைகள்!
உன் சேலையில் முகம் புதைத்த நாட்கள் !
உன் மடியில் கழிந்த தூக்கங்கள் !

எல்லாம் மீண்டும் கிடைக்காதா?
என்றே
ஏக்கம் பிறக்கும் தினமும்!
பலரும் பார்க்க,வியக்க மிகச்
சரியாய் வளர்த்தாய் என்னை !
வாழ்க்கை வாளின் கூர்மைகள்

பலவும் உன்னை குத்தி இம்சித்தும்
எள்ளளவும் அவை எனை அணுகாது
வழி தடுத்தாய் நீ !
தியாகத்தையே தொழிலாக கொண்டாய் !

அர்பணிப்பையே வாழ்க்கையாக்கினாய்!
உனக்கென ஓர் லட்சியம் உண்டெனில் அது
என் ஆசைகளை நிறைவேற்றுவதாகத்தானிருந்தது.
உன் ஆசைகள் பலவும்

எரிந்து மட்கித்தான் என் ஆசை மலர்கள் மலர்ந்தன
என்று
முன்பு அறியவில்லை நான் !
நினைக்க நினைக்க வியக்கவைக்கும் உயிர்
ஒன்று உண்டென்றால் அது நீதான் !

நீ உணவை பரிமாறி உண்ணவில்லை நான்,
மாறாக
உன் அன்பை பரிமாறினாய் உண்டேன் !
வளர்ந்தேன் !

உலகிலேயே தித்திப்பான கனி எது என்று
எனைக் கேட்டால்
தயங்காமல் சொல்வேன் நீதானென !
ஆம்!
கனி தான் தின்னத் தின்ன
திகட்டாத கனி

சங்கு பூ (kakkattan (Tamil) Ternatea ternatea (L.)




சங்கு போன்ற அமைப்பில் பூ  இருப்பதால் நீல நிற பூக்கள் பூக்கும்  இந்த தாவரம் சங்கு கொடி என்று அழைக்கப்படுகிறது .இது பெரும்பாலும் அலங்காரக் கொடியாகவே வீடுகளில்  படரவிடப்படுகிறது .ஆயினும் இந்தக் கொடிவகைத் தாவரம்  சிறந்த மருத்துவ குணங்களையும் அடங்கியது.  இது ஆசியாவில் தோன்றிய வகை தாவரமாக இருந்தாலும் அனைத்து ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்த்ரேலியா போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது. பிலிப்பின், இந்தோனேசியாவில் மலேசியாவில்
அதிகம் .  இதில் வெள்ளை பூ பூக்கும் விதமும் உண்டு

தாவரப் பெயர்      Ternatea ternatea (L.)
குடும்பம்    FABACEAE, (PAPINONACEAE)

இதர இந்திய மொழிகளில் வழங்கப்பட்டு பெயர்கள்

Shankapushpi,
shankupushpam,
aparajit (Hindi),
aparajita (Bengali),
kakkattan (Tamil)

நீல மலருடையதைக் கறுப்புக் காக்கரட்டான் என்றும், வெள்ளைப் பூ உடையதை வெள்ளைக் காக்கரட்டான் என்றும் கூறுவார்கள் .

இதன் இலை வேர் விதைகள் மருத்துவ பயன் மிக்கவை .

காக்கரட்டான் விதைகள்  மணம் உடையதாகவும் புளிப்புச்சுவையுடன்  இருக்கும்.
இதன் குணம் சிறுநீர் பெருக்குதல், குடற் பூச்சிக் நீக்குதல் , , பேதி, வாந்தி, தும்மல், உண்டாக்குதல்.
 நெறிக்கட்டிகள் வீங்கி இருக்கும் போதுசங்குப்பூவின் இலைச்சாறு ஒரு தேக்கரண்டி, இஞ்சிச்சாறு ஒரு தேக்கரண்டி எடுத்துக் கலந்து அருந்து வர வியர்வை நீங்கும்.

சங்கு பூவின் இலைச்சாற்றைக் கொண்டு புடமிடதங்கம் பஸ்பமாகும்.
 நீண்ட  நாள்  கப நோய்களுக்கு காக்கரட்டான் பட்டையை நன்கு இடித்து, சாறு பிழிந்து சிறிதளவு   எடுத்து குளிர்ச்சியான பாலுடன் அருந்தி வர எளிதில்  நிவாரணம் கிடைக்கும்

காக்கட்டான் வேர்ப் பட்டையை ஊற வைத்த  நீரை கால் டம்பளர் அருந்தி வர, சிறுநீர்
நோய்களும் சிறுநீர்ப் பாதை எரிச்சல், வலி முதலிய நோய்களும் குணமாகும்.பை நோய்கள் குணமாகும் .
மேலும் இந்த கொடியின்
 இலைகள் ஞாபக சக்தியை புத்திசாலித்தனத்தை   
வளர்க்கும் சக்தி கொண்டது  நரம்பு சம்பந்தமான குறைகாயும் போக்கும் .
சில பழங்குடிகளிடம் இதை கரு நீக்க பயன் செய்தாலும் உண்டு .
இதன் இல்லை சாறு வயறு உப்புசத்தை போக்கும் .
தொண்டை புண்ணை ஆற்றும் .

 The juice of the root is mixed with cold milk and is drunk to remove phlegm and for chronic bronchitis (1).
 The roots are bitter, refrigerant, laxative, diuretic, anthelmintic and tonic and are useful in dementia, hemicrania, burning sensation, leprosy, inflammation, leucoderma, bronchitis, asthma, pulmonary tuberculosis, ascites and fever while the leaves are useful in otalgia and hepatopathy and the leaves, cathartic  . The plant is considered useful for eye infections, skin diseases, urinary troubles, ulcers and has antidotal properties  .

நமக்கு எளிதில கிடைப்பதால் இந்தன் அருமை நமக்கு புரிவதில்லை .தங்கத்தையே பஸ்மாக்கி சாப்பிடக்கூடிய  தன்மை கொண்டது இந்தக் கொடி சளியை அப்படியே அறுத்து கொண்டுவந்துவிடும் இதன் வேர் சாறு.

சங்குன்னா சும்மாவா !

Sea Shell (Harpaco Chiragra)

She sells seashells
On the seashore.
The shells that she sells
Are seashells I’m sure.
So if she sells seashells
On the seashore,






I’m sure that the shells
Are seashore shells.

Indian Folk Art

  • Scenes from Ramayana



Krishna Revealing His Vishavarup to Arjuna in Kurukshetra War

 

Zamindar of Medieval Bengal


Marriage of Fishes


A Pair of Owls

  

Radha Krishna on a Swing with Gopini

Vasudev Carrying Infant Krishna with Sheshnag Protecting them


Indian Painting